வெற்றி கொண்டு மகிழ்ந்த போதெல்லாம்
உனை எண்ணியதே இல்லை எம் மனம்
தோல்வி கொண்டு தனிமையில்
விடப்பட்ட போது மட்டும்
உம் அரவணைப்பை தேடுகிறது ஏனெனில்
எனை உணர்ந்த முதல் ஆணல்லவா நீர்
கரம் பிடித்து நடைப்பழக கற்றுதந்தீர் இன்று
தானாய் நடக்கிறேன் ஏனோ
என் கரம் உம்மை தேடுகிறது
ஆயிரம் பேர் எனை சுற்றி ஆதரவாய் நின்றாலும்
எம் சிரம் உம் தோள் தேடுகிறது
மனம் இல்லாதவர்களின் இடையே எனை
தனிமையில் விட்டு சென்ற என் தந்தையே
எம் மனதில் உம் இடம் நிரப்பா யாரும் இல்லை
இப்படிக்கு உம் மகள்
பூங்குழலி !!!
No comments:
Post a Comment