Friday, January 11, 2013

எம் ஏந்தலே

எம் ஏந்தலே கயலினம் சுமந்த நதி போலே
உமக்கான எம் காதலை சுமந்து
கொண்டு காத்திருக்கும் ஏந்திழையாளை
காண சகிக்காது தண்டலை மயில்கள்
நடனமாட மறந்து விட்டனவோ !!!!!!

விண்ணில் திரிகின்ற மீனெல்லாம்
எம் விழி நீரில் உழல கண்டு
தாமரை தாங்கிய குளம் தம் நீரெல்லாம்
வடித்து விடாதென எம் தோழி கதைக்க கேட்டு
மனம் பதைக்க நின்றேன் கோதை !!!!

கல்கி மகளின் கால் சதங்கையின்
இசை கேளாமல் எம் நந்தவன
குவளை பூ கண் விழித்து நோக்க
மலரின் வாட்டம் போக்க மங்கை
குரலெடுத்து பாடினாள் !!!!!!

தேம் பிழி மகர யாழோ யென
வாண்டுகளும் தலை தூக்கி நோக்கி
எம் வதனம் தீண்ட என்னவனோ யென
எம் வண்ணம் மாறி விட்டதடா !!!!

எம் மாதவனே எனை முகர ஏனோ
நாழிகளை கடத்துகிறாய் !!!

காத்திருக்கும் பூங்குழலி !!!

No comments:

Post a Comment