உன்
நெருக்கத்தில் எனை மறந்தேனா ?
உன்
விலகலில் மரித்தேனா ?
உன்
ஸ்பரிசத்தில் உயிர் தேனா?
என
ஆயிரம் கேள்விகள் யெனை
அடைக்காதாலும்
மொழிந்து கொண்டே இருக்கிறேன்
எதுவாயினும்
எனக்கு உன்னைமட்டும் பிடிக்கும்
நிஜம்
தேடி அலைந்த என் முன்னே
நிழலாய்
வந்து நிஜமாகியவன்
நீ
ஒருவன் மட்டும் என்றேனும்
உன்
எண்ண ஓட்டத்தில் எனை காண நேர்ந்தால்
ஓடிவா
நீ எனைவிட்டு சென்ற
உன்
மனவாசலிலே காத்திருக்கிறேன் !!!!!
காதலுடன்
பூங்குழலி !!!!
No comments:
Post a Comment