கன்னியருக்காய் வரும்
கன்னி பொங்கலே
காணும் பொங்கலே உனை
இரு கைதொழுது வரவேற்கிறோம்
!!!!
வரப்பு சண்டை வாய்க்கா
சண்டை
அத்தனையும் மறந்து விட்டு போன சொந்தமெல்லாம் தேடி சென்று
உரிமையோடு உறவு சொல்லி உபசரித்து
காளையர்கள் கன்னியரை வட்டமிட கண்டும்
காணமல் பெரியவர்கள் நகர்ந்து செல்ல !!!!!
சுமங்கலியின் கையாலே புது மஞ்சள் வாங்கி வந்து
புதுப்பானை தனிலே பாங்காய் அதை முடிந்து
காற்றோடு கதிரடித்து முற்றிய நெற் கதிரெடுத்து
பசும்பாலோடு வெல்லம் இட்டு பக்குவமாய் பொங்கலிட்டு படைசிருக்கோம்
மாரியாத்தா !!!
நெனச்சபடி கண்ணுக்குள்ள காதலெல்லாம் தேக்கி வைச்சு எனை
வாஞ்சையோடு பார்த்து நிற்கும்
எம் மாமனுக்கே நான் சொந்தமாக வேணுமடி !!!!!
குதூகலத்தோடு கன்னியர்கள்
ஆனந்தமாய் ஆடிப்பாட
களிப்புடன் இன்று காணுவோம்
கன்னியரின் பொங்கலாம் காணும் பொங்கல் !!!!
உறவுகளுக்கும் நட்ப்புகளுக்கும் பூங்குழலியின்
அன்பு காணும் பொங்கல் வாழ்த்துக்கள் !!!
No comments:
Post a Comment