Monday, January 28, 2013

உலகநாயகன்



நான் எழுதுவது எல்லோருக்கும் உடன்பாடு இல்லாமல்
இருக்கலாம் ஆனால் இது என் கருத்து அதை பதிக்கிறேன் . 

தமிழ் சினிமாவில் புது புது டெக்னாலஜியுடன் 
ஈடு கொடுத்து ஓடக்கூடிய ஒரு மிகச்சிறந்த வலிமை 
வாய்ந்த குதிரை திரு.கமலஹாசன் .

பல வருடங்களுக்கு முன் இவர் நடிப்பில் வெளிவந்த 
ஹேராம்,குணா ,போன்ற படம் பார்த்துவிட்டு புரியவில்லை
என்றவர்கள் இன்று அதை விரும்பி பார்கின்றார்கள் , 


இன்று ஏற்று கொள்ளகூடிய ஒரு விஷயத்தை பனிரெண்டு 
வருடங்களுக்கு முன்னே சொல்லிவிட்டார் திரு.கமலஹாசன் .

இன்று அவருக்கு விஸ்வருபமாகிவிட்டது அவரது 
விஸ்வருபம் திரைப்படம் போர்க்கொடி தூக்கி 
போராடவேண்டிய படமல்ல விஸ்வருபம் ,

இதில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்க 
பட்டிருபதாக நாம் கோவம் கொள்வதும் முறையல்ல 
ஆப்கான் தீவிரவாதம் பற்றிய 

படங்களை ஆங்கிலத்தில் நிறைய பார்த்துவிட்டோம்
இன்னும் வரும் அதையும் நாம் பார்ப்போம் என்பதில்
மிகையெதும் இல்லை அது போன்ற ஒரு சாதாரண தீவிரவாத 
பாடம் தான் விஸ்வருபம் .

இதில் அவர் ஒரு முஸ்லீமாக தன்னை காட்டி இருக்கிறார் அவ்வளவே .

மதம் எனும் மூன்று சொல்லை மட்டும் வைத்து கொண்டு
பிரச்சனைகளை பெரியதாக காட்ட வேண்டிய 
அவசியம் இதில் தேவையில்லை என்றே தோன்றுகிறது .

கமல் தனது அணைத்து படைப்புகளிலும் புதுமையை 
புகுத்துவதுதான் ஒரு சிலர் தங்களது சொந்த பிரச்சினைகளுக்காக 
ஓர் சிறந்த படத்தை வெளியிட தடுப்பது முறையில்லை .

இத்தனை எதிர்ப்புகளையும் முறியடித்து விஸ்வருபமாய் 
திரைப்படம் வெளிவருமா ??????


நன்றியுடன் பூங்குழலி !!!!

No comments:

Post a Comment