Monday, February 4, 2013

நிஜத்தை இழந்து நிழலாகி


நீ என் உதயமா அஸ்தமனமா ?
அறியாமலே தொடர்கிறேன் உன் பாதத்தை!!!

அனுமதியில்லாமலே உன்னை 
அணைத்து பிடிக்க எனை 
அறியாமல் எண்ணம் கொள்கிறேனடா !!!

உன்னை அள்ளிப்பருக ஆசைகொண்டு
யுகங்களை கடந்து உன் பின்னே
வந்துவிட்டேன் கானல் நீராகி விடாதே !!!

என் விடியலாய் இருப்பாய் என்று
உன் விழிநோக்கி நிற்கிறேன் விழி மூடிவிடாதே...
இருண்டுவிடும் என் வானம் !!!

நிஜத்தை இழந்து நிழலாகி
விட்டேன் வந்துவிடு இல்லையெனில்
காற்றோடு கலந்து உன்னை தீண்ட அனுமதிகொடு!!!!!

காதலுடன் பூங்குழலி !!!

No comments:

Post a Comment