Friday, January 11, 2013

என்ன கிறுக்கா அலையவிட்டு


என்ன கிறுக்கா அலையவிட்டு 
முறுக்கா நிக்கிறியே ...
கண்ணால என்ன மயக்கி விட்டு 
கதிரா அடிக்கிறீயே....
எம்மோட கண்ணுக்குள்ள 
நொழஞ்சுபுட்டு கரையேற மறுக்குறியே !!!!

மோரா இருந்த என்ன தயிரா
ஓறைய வச்சு காத்தா மறைஞ்சுபுட்டியே ....
ஓடாயிருந்தயென்ன ஒடைச்சு
மணலா நிரவி விட்டு
மலரா இருந்தயென்ன வண்டா
அலையவிட்டு சிட்டா பறந்ததென்ன !!!!!

ஊரொறங்கி போன சாமத்துல
நான் ஒருத்தி மட்டும்
ஒறங்காம காத்திருக்கேன் விடியலுக்கு
உம்மோட உசுருக்குள்ள புகுந்து
உதிரமா ஓடொணும் ஊருமெச்ச
என்னாசை மச்சான் கைபுடுச்சு
நுறு ஜென்மம் வாழனும் !!!!!

காதலுடன் பூங்குழலி !!!!

No comments:

Post a Comment