காற்றில்
அசைந்தாடும் கொடிமுல்லையாய்
சுருள்
சுருளான கேசத்துக்குள்ளே
நின்
விரல்கள் புகுந்தோடும் வேலையிலெல்லாம்
நித்திரை
இழந்த நிலவாய் தேய்ந்து விடுகிறேன்
கயிறாக
திரித்த கூந்தலிலே முடிச்சிட்டு
முத்தம்
ஒன்று கொடுக்கையிலே
முழுதும்
பற்றி எரியும் சூரியனாய் ஜொலிக்கிறேன்
வெடித்து
சிதறிய காதலுடன் மார்பில் சாய
தேற்ற
முடியாமல் நீயும் எனைபோலே
கட்டி
அணைத்து கதறி நிற்க
சிறகு
முளைத்த சடைகளுடன்
சிந்தை
இழந்தவளாய்ஆயிரம் முறை
நினைத்து
பார்த்துவிட்டேன் !!!!
எனை
ஏங்கவும் வைக்கிறாய்
தேங்கவும்
வைக்கிறாய்!!!!!
காதலுடன்
பூங்குழலி !!!