நான்
திமிருக்கும்
திமிர்
பிடித்தவள்
உம்
ஆணவமான
ஆண்மைக்குள்
எம்மை சிறைக் கொண்டவரே !!!!
யாம் உமக்களிக்கும் பொற்காசுகள்
தாம் எம் வியர்வைத்துளிகள் !!!!
மழைத் தேவனின் வருகைக்காக
உடல் திறக்கும் நிலம் போலே !!!!
பால்மணம் மறந்து பருவம்தொட்ட நாளாய்
கனிந்திருந்தேன் உமக்காய் !!!!
எம் திமிர் தின்று உயிர் கொடுத்த ஏந்தலே
உம் திரட்டிய மீசைக்குள் புகுந்துவிட்டேன் !!!
எமக்குள் புகுந்து வேர்விட்டதால்
நீரோன்றும் வென்றுவிடவில்லை !!!
எம் வேந்தே நீர் திமிர் பிடித்தவர்
நான் திமிருக்கும் திமிர் பிடித்தவள்
தீர்த்துகொண்டு அறிவித்துக்கொள்
யார் வென்றாரென...!!!!
காதலுடன் பூங்குழலி !!!!
எம்மை சிறைக் கொண்டவரே !!!!
யாம் உமக்களிக்கும் பொற்காசுகள்
தாம் எம் வியர்வைத்துளிகள் !!!!
மழைத் தேவனின் வருகைக்காக
உடல் திறக்கும் நிலம் போலே !!!!
பால்மணம் மறந்து பருவம்தொட்ட நாளாய்
கனிந்திருந்தேன் உமக்காய் !!!!
எம் திமிர் தின்று உயிர் கொடுத்த ஏந்தலே
உம் திரட்டிய மீசைக்குள் புகுந்துவிட்டேன் !!!
எமக்குள் புகுந்து வேர்விட்டதால்
நீரோன்றும் வென்றுவிடவில்லை !!!
எம் வேந்தே நீர் திமிர் பிடித்தவர்
நான் திமிருக்கும் திமிர் பிடித்தவள்
தீர்த்துகொண்டு அறிவித்துக்கொள்
யார் வென்றாரென...!!!!
காதலுடன் பூங்குழலி !!!!
No comments:
Post a Comment