Saturday, January 26, 2013

யார் ..?? புதுமை பெண்

புதுமை பெண் என்பவள் அதை தன் 
சுட்டெரிக்கும் விழியில் காட்டவேண்டும்
தென்றலாகவும் இருக்கவேண்டும்
புயலாகவும் சுழன்றடிக்க வேண்டும் ............
ஜோதியாக ஜொலிக்கவும் வேண்டும்
 நெருப்பாக எரிக்கவும் வேண்டும் ..........
தேனாக இனிக்கவும் வேண்டும் தேனீ 
யென தீயவரை கொட்டவும் வேண்டும் .........
வில்லென வளையவும் வேண்டும் கொடும்
பாம்பின் வாயிலிருந்து
வெளிவரும் விஷம் போலே நமை 
சீண்டுபவர்களை தீண்ட வேண்டும் நம் பேச்சு ..............
நம் ஒவ்வொரு அசைவிலும் நம் பலம் காட்டவேண்டும்
இதைவிடுத்து புதுமை பெண் என்பதை
ஆடையில் காட்டி
நம் இனத்தை தலைகுனிய
வைக்கவேண்டாம் என்னினமே !!!!!

நட்புடன் பூங்குழலி !!!

No comments:

Post a Comment