அடிச்சடிச்சி சொன்னாலும் அடங்கலையே
யெம் மனசு சிலுத்துக்கிட்டு எம்
பேச்சை கேக்காம சிட்டா பறக்குதையா
ஒத்த வழி பாதையெல்லாம் ஒன்னத்தேடி
என்னுசுரு அலையா அலையுதைய்யா !!!!
பல்லிடுக்கில் சிக்கிகிட்ட மொளகா வெத
போல
என்னுசுருடுக்கில் மாட்டிகிட்டு
உசிரெடுக்க பாக்குறியே கண்ணுக்குள்ள வெதச்ச காதல் நெஞ்சுக்குள்ள
மொளச்சுக்கிட்டு பேயாட்டம் ஆடுதைய்யா
!!!!
எம்மோட சீவனயெடுத்துக்கிட்டு
உம்மோட உசிர கொடுத்து விட்ட
ராசாவே நீ எம்புட்டு ஈர
மனசுக்காரனைய்யா !!!!
காதலுடன் பூங்குழலி !!!!
No comments:
Post a Comment