Friday, January 11, 2013

தை மகளே

தை மகளே திருமகளே தமிழனுக்காய்
பூத்த தமிழ் மகளே திங்களுக்கு முன்
பிறந்தவளே தென்றலாய் வருபவளே
உம் வரவையே யாம் போற்றுவோம் !!!!!

புத்தம் புது சூரியனாய் பட்டொளி வீசி வாராய்
பச்சை வண்ண ஆடை உடுத்தி பட்டு போன
எம் வாழ்வை பசுமையாக்க வாராய் !!!!
எம் வாழ்வெல்லாம் இனித்திருக்க
செங்கரும்பாய் வாராய்
வெட்டி யெடுத்த புது பொன் மஞ்சளாய்
எம் வாழ்வை மணக்க செய்ய வாராய் !!!

கடனுக்கு விதை வாங்கி உனை நம்பி
நாற்றை பதித்து நான்கடி வளர விட்டு
எம் உதிரத்தை நீராய் பாய்ச்சி
நான்கு போகம் வளரவிட்டு
பாங்காய் அறுவடை செய்து முதிர்ந்த நெல்லெடுத்து
தேனும் நெய்யும் கலந்து பொங்கலிட்டு
காத்திருக்கும் எம் பெயரே விவசாயி !!!!!

நித்திரையில் யிருக்கும் தமிழா
நம் தை அன்னை வந்துவிட்டாள் விழி திறந்து பார்
அன்னையே எமை எதற்கும் துணிந்த இனமாக்கு
அதுபோதும் தாயே உம் வரவை யாம் போற்றுவோம் என்றென்றும் பொங்கலிடுவோம் !!!!

உறவுகளுக்கும் நட்புகளுக்கும் பூங்குழலியின்
இனிய தை திருநாள் , உழவர் மற்றும்
பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் !!!!!

No comments:

Post a Comment