விழியிலே ஒளியில்லை கொடுக்க
தவறிய ஆண்டவனை
வெறுத்ததில்லை
மதி கொடுத்த ஒளியாலே
பயணிக்கிறோம் யாருக்கும் பாரமின்றி
எங்களது பாதையில்
வண்ணங்களை கண்டதில்லை
வாரி வாரி பூசியதில்லை ஆனால்
அதை நேசிக்கிறோம்
வானவில்லை பார்த்ததில்லை அதிலே
பயணிக்கின்றோம் வண்ணமயமாய்
மனிதர்களின் முகம் கண்டதில்லை
ஆனாலும் நேசிக்கிறோம்
பாவம் அவர்கள் மதியிலே
ஒளியில்லாத குருடர்கள்
காதலுடன் பூங்குழலி