Tuesday, May 28, 2013

உயிர்கிழிந்து தலைகுனிந்தாள்


வறுமையிலே 
உடுப்புக்கிழிசல் வழியே உடல் தெரிய
ஆணினம் தன்னுடல் பார்க்க 
"உயிர்கிழிந்து தலைகுனிந்தாள்" ஏழைப்பெண்

ஆணினத்தை கவர செயற்கை
கிழிசல் பலசெய்து தனைமறந்து
மயங்கி நாகரீகம் எனும் போதை
மேடையிலே மேலைபெண் ..!!

கிழிசலுக்கு பயந்து ஒருத்தி..!!
கிழிசலுக்கு துணிந்து ஒருத்தி..!!
இத்தையல்களின் தையலை
தைக்க வழியுண்டோ ஏதேனும்..??

கேள்விகள்மட்டும் உண்டு இங்கு
விடைகள் மொத்தமாய் எங்கோ...????

- காதலுடன் பூங்குழலி !!!!

Monday, May 27, 2013

விதவையின் கனவு


பல இரவுகளில் இதயம்துடிக்க
ஒரே கனவை கண்டுருக்கிறேன்
வண்ணத்திலே வந்த கனவினை
வார்த்தையாக்க முடியாமல்
நீ வந்ததற்கு சாட்சியாக
உதிர்ந்த பூக்களையும்
உடைந்த வளையல்களை மட்டும்
இன்னும் பாத்திரமாக வைத்திருக்கிறேன்

காதலுடன் பூங்குழலி 

 

Sunday, May 26, 2013

அக்கா


வீட்டிலே அவளிடத்தை பிடித்து
கொண்டதற்கு கொள்ளை கோவம் கொண்டிருந்தாலும்
அதை என்னிடம் காட்டியதில்லை
உறங்கும் போது பக்கம் அமர்ந்து
முகம் நோக்குவாள்
விழித்ததும் கிள்ளிவிட்டு ஓரம் நின்று
கவனிப்பாள் ஆனால் ஒருபோதும் என்
அழுகையை விரும்பியது இல்லை

எனை வயிற்றில் சுமக்கவில்லை
மடியில் சுமந்திருகிறாள் 
அன்னையை போலே மார்பில் பாலுட்டவில்லை
அன்னையாய் மாறி அணைத்திருக்கிறாள் 

என்னை நிழல் போலே தொடரும்
கண்காணிப்பாளர் அவள்
அக்கா என்றதும் ஓடிவந்து கட்டிகொள்வாள்
சிறிதும் தயக்கம் இன்றி சொல்கிறேன்
நீ என் மழலை அன்னையடி


காதலுடன் பூங்குழலி

உன் நினைவு அலைகள்


வானம் வரைந்து வைத்த துரிகை போலே
வண்ணமயமாய் உன் நினைவுகள்

வெளிச்சங்களை தின்றுவிட்டு
கருமையை பூசி காத்திருக்கும்
மழை மேகம் போலே
எப்பொழுதும் பொழியத் தயராய்
என்னுளே உன் எண்ண மழைகள்
தொடுவதும் விடுவதுமாய்
என் மனதின் கரைகளை அரித்து செல்லும்
உன் நினைவு அலைகள்
கண்ணில் படாமல் சுவாசம் தரும்
காற்றைப்போல்
எப்பொழுதும்
என்னக்குள் அணைதிருக்கும் உன் வாசம்

இப்படி முழுமை பெறாத பல இரவுகளை
கடந்த பின்னும் காத்திருக்கிறேன்
உன் விரல் தீண்டலுக்கு

காதலுடன் பூங்குழலி
….

அணைக்க அன்னையின்றி



வெள்ளை சிரிப்பினிலே எனை
கொள்ளைகொண்ட கொள்ளைகாரனே
பட்டு பாதமதில் ஆயிரம்முறை
எட்டி உதைத்தாலும் மறுபடியும்
பாதம் பட காத்திருக்கிறதடா என் கன்னம்
எச்சில் நீரொழுகும் ஈரா இதழாலே
நெற்றியெல்லாம் கோலமிட்ட
என் அழகு கண்ணனே

உனை கருவறையில் நான் தாங்க
என்னதவம் செய்தேனோ ..!!
என்று கட்டி அணைக்க அன்னையின்றி
நித்திரையிலேயே (கனவிலே )
நிதமும் நான் வளர
என்ன பாவம் செய்தேனோ

காதலுடன் பூங்குழலி

தோழி நின் நினைவில்



சேற்றில் சிக்கிய களிறெனவே
தவிக்கிறேனடி தோழி
நின் நினைவில்

காடுமலை சோலைதனில்
காற்றாக கரம்பிடித்து
மயிலோடு ஜோடி சேர்ந்து நடமாடி
வென்றோமே நினைவிருக்கா
.??

நந்தவன மலர்பறித்து அதைபோலே
உனைதாங்க நல்லான் ஒருத்தன்
நாதனாய் வர
உனக்கு நானும் எனக்கு நீயும்
வேண்டி நின்று.. நாராயணனின் பாதம்
பணிந்தோமே நினைவில்லையா
..??

அருவிக்கரையோர கயலெல்லாம்
என் நிலைகண்டு கலங்குதடி என் தோழி
நாம் நின்ற இடம், நடந்த இடமெல்லாம்
நம் நினைவுகளை சுமந்த படி
நிற்குதடி என் தோழி

வில்லென்ற விழியினிலே நீரோடு
மணமாலை சுமந்து போனவளே
..!!

அரசமரத்தடி குயிலும் இசைபாட மறந்ததடி
மாமரத்து வண்டும் சப்தமின்றி போனதடி
..!!
விடியலிலே கண்ட கனா பலிக்கும் என்றே
நம் இறந்த காலம் சென்று பார்கிறேன்
கண்டதிலே நாலிலே ஒன்றிரண்டு
பலித்திடாதா என் அன்பு தோழி

காதலுடன் பூங்குழலி !!!!
 

நர்த்தகியின் நடராஜனே



ஒற்றை சங்கேந்தி உடலெல்லாம் திருநீறுபூசி
பித்தனாய் உனை மாற்றி உலகை வலக்கையிலே
தாங்கி நிற்கும் உலகநாதா

உயிர்கொண்ட நிலவாக உம் மீது படர்ந்திருக்க
மார்போடு எனை அணைத்து

என்னுள்ளே குடிகொண்டு
எம் ஒருபாதி தனதாக்கி

வெண் பனி பூதூவ செந்தாமரையாய் முகம் மலர
நீயின்றி நானில்லை உமையவளே என்றெனை
தன்னுளே கொண்டவனே

கங்கையை சுமந்திருக்கும் கொற்றவனே
நர்த்தகியின் நடராஜனே

ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
உனையன்றி வேறேதும் கதியில்லை எமக்கு

காதலுடன் பூங்குழலி
…..

இனியும் தாமதியாதே பெண்ணே



மேண்மை பெற்ற ஆண்கள் மத்தியிலே
சிறுமை உள்ளம்
கொண்ட கள்ளிசெடிகளும் 

இருப்பது  இயற்க்கையடி பெண்ணே
கலங்காதே
மூலையில் முடங்காதே தூற்றுவோரை கண்டு
துயர்கொள்ளதே
துணிந்துநில்

முடக்கிவிட்டதாய்
மீசைமுறுக்குவோர் முன்னே
சாதனைகள் படைத்திடு
சரித்திர ஏட்டிலே
உன் பெயரையும்
பதித்திடு
பெண்ணே
உனை தூற்றுவூர் சிலர்தான்
போற்றுவூர்
தரணியெங்கும் உள்ளனர்
தயக்கத்தை உடைத்திடு
காற்றுபுக இடைவெளியும்
உன் கால்பதிக்க காத்திருக்கிறது
இனியும்
தாமதியாதே

காதலுடன்
பூங்குழலி