Saturday, January 19, 2013

இரண்டாம் சாமத்திலே

நிலவு தனை மறக்கும் இரண்டாம் சாமத்திலே 
செந்தாமரையாய் வீ ற்றிருக்கும் எம் பொற்றமரையே
உம் செவ் இதழில் தேன் பருகும் வண்டாகி போனேனடி என்றுரைக்கும் மன்னவனே !!!

உம் ஆற்றல் மிகுபேச்சால் வஞ்சியின் மனம் பறித்து 
மானாக யிருந்தவளை மயிலாக மாற்றி
மயிலாக யிருந்தவளை ஒயிலாக
உம் எண்ண கூட்டில் பூட்டிவிட்டு !!!!

வித்தகம் பேசுவது நியாயமா
என்று உன்னவள் சிரித்த சிரிபொலியோ
அந்த அருவி கொட்டும் ஒலி!!!

தொள்ளு தமிழ்மகள் வண்ண முகத்திலே
நாணம் பூசி காத்திருக்கிறாள்
கொற்றவன் உம் வருகைக்காக!!!!

தேனுங் கனியும் மதுவுங் கலந்தொன்று செய்த உடலுடையாள் உம் ஏக்கத்திலே எண்ணம் மறந்து இடை சுருங்க இதழ் மடங்க அங்கு உமை வளைக்க அவள் வெள்ளை மனந் திறந்து... -
புதுப் பாலின் சுவையும் மணமும் கலந்தொரு
பாடம் நடத்துகின்றாள்.!!!!

காற்றிலே புரவி செய்து வில்லில் லொரு
பாதை அமைத்து அமுதுண்ண பறந்து வாரும்
தேடலற்ற காதல் கொண்டு உம் மீது கொடிபோலே
படர்ந்து இருக்க ஆசைகொண்டு பூத்திருக்கும்
பூங்குழலியின் கரம் பிடிக்க !!!!!!!

காதலுடன் பூங்குழலி

No comments:

Post a Comment