Tuesday, August 20, 2013

வளைகாப்பு



நமது கலாச்சாரத்தில் கருவிலே உதிப்பது முதல் உருவற்று அழிந்து நீர்த்துப்போகும் மறைவு வரை அத்தனையையும் தெய்வீகமாக நினைத்து கொண்டாடுவதே வழக்கம்.ஏனெனில் நாம் எதையும் முழுவதுமாக முற்றுப்பெறுவதாக நினைப்பதில்லை.எந்த ஒரு சடங்கும் தனி ஒரு மனிதனின் கட்டளைக்குக் கட்டுப்பட்டோ கட்டாயத்தின் பெயராலோ பின்பற்றபடுவது இல்லை,
பலரது வாழ்வில் உணர்ந்து தெளிந்த விஷயங்களை உணர்வுப்பூர்வமாக ஆராய்ந்து அது சரியென எல்லோருமாய் உணரும் போது அது சடங்காக ஏற்றுக்கொள்ளப்படுகிறது,. அவ்வாறு ஒவ்வொரு பெரியோர்களும் வாழ்ந்து பார்த்து கடைபிடித்த சடங்கே வளைகாப்பு அல்லது சீமந்தம்.

கர்பினிப்பெண்களுக்கு வளைகாப்பு சடங்கு கர்பம் தரித்து ஆறாவது முதல் எட்டாவது மாதம் வரை அவரவர் குடும்ப வழக்கப்படி நடத்தப்படுவதுண்டு. காரணம் ஆறாம் மாதம் முதல் கர்பகுளத்தில் கவலையின்றி நீந்திக்கொண்டிருக்கும் குழந்தை வெளியுலக விசித்திரங்களை கவனிக்கத் துவங்குகிறது.
உஷ்ணம், குளிர், சப்தம் என்று தன்னைச் சுற்றி நடக்கும் சகல விஷயங்களையும் குழந்தை கவனிக்கத் துவங்கும்.

எட்டாம் மாதம் முதல் கருவிலிருக்கும் குழந்தை நன்றாக கேட்க துவங்குகிறது.ஒரு குழந்தை முதன் முதலாக உலகை கவனிக்கும் தருணத்திலேயே அதன் கவனத்தை அந்த துவக்கத்தை வளைகாப்பு நடத்தி வரவேற்கிறோம்.அதனால் தான் இச்சடங்கின் போது கர்ப்பமான பெண்ணின் இரண்டு கைகளிலும் பலவை ஒலி எழுப்பக் கூடிய வளையல்களை அணிவித்து ஒலி எழுப்பி பாடல்கள் பாடி மகிழ்வர்,சில குடும்பங்களில் கர்பினிப் பெண்ணின் வயிற்றை விளக்கேற்றி ஆராத்தி எடுப்பார்கள்! காரணம் இருட்டுக்குள் இருக்கும் குழந்தைக்கு வெளிச்சம் காட்டி இதோ நாங்கள் தான் உனது உறவுகள். நன்றாகப் பார்த்துக்கொள். நீ வெளியே வந்தவுடன் உன்னை வரவேற்கப்போகும் சொந்தங்கள் நாங்கள் என்பதை உள்ளே இருக்கும் குழந்தைக்கு உறுதிப்படுத்தும் விதமாக சடங்கு செய்வார்கள்.

அன்னையின் சிறு அசைவினை கூட உணர்ந்து கொள்ளும் அதித சக்தியை ஆண்டவன் நமக்கு கருவிலேயே அளித்துவிட்டான் ,அதனால் தான் குழந்தையாய் சுமக்கும் பெண் நல்லதையே காணவேண்டும் ,சிந்திக்கவேண்டும் ஒரு அன்னையின் எண்ணம் எப்படி இருக்கிறதோ அதை பொருத்துதான் குழந்தையின் தலைவிதி நிர்ணயிக்கப்படுகிறது.
தான் உயிரை கொடுத்து இன்னும் ஒரு உயிருடன் உலகிற்க்கி திரும்பி வருகிறாள் ஒரு பெண் ,
இவர்களுக்கு தகுந்த சூழ்நிலையை உடனிருக்கும் நாம்தான் உருவாக்கி கொடுக்கவேண்டும் .

வண்ண வண்ண வளையல்களை கையில் அடுக்கி அன்னையும் தந்தையும் கருவில் இருக்கும் குழந்தையிடம் என் செல்ல கண்ணா நீ வாழப்போகும் உலகில் இதுமாதிரி பலதரப்பட்ட மனிதர்களை சந்தித்து போராடவேண்டும் என்று அறிவிக்கும் நாளே சீமந்தம்,

மாத தேதியில் வரவிற்கு அதிகமாய் பட்ஜெட் போட்டுவிட்டு அதைக் கிழித்து போடும் காகிதம் போலே, தேவையில்லை என கலைத்து விட்டுப் போகும் வெறும் சதைப்பிண்டம் அல்ல,அது ஒரு உயிர் நம்மோடு வாழ நம்மவர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையில் நம்மை நாடி வந்து கொண்டிருக்கும் ஒரு ஜீவன். இந்த உன்னதத்தை உணர்ந்து எல்லோரும் ஒன்றாகக் கூடிக் வரவேற்று மகிழ்வதே வளைகாப்பு என்கிற சீமந்தச் சடங்கு . எனவே நமது முன்னோர்கள் காலங்காலமாக கடைபிடித்து வரும் அறிவியல் மற்றும் மனோவியல் ரீதியான அற்புதாமன சடங்கை மதித்துப் போற்றி பாதுகாப்போம்....
நம்மாலே ஒரு அபிமன்யூவை உருவாக்க முடியாது போனாலும் வருங்காலத்தை ஆள நல்லதோர் மனிதனை உருவாக்கவேண்டும் ....

பூங்குழலி ......!!!

No comments:

Post a Comment