ஒற்றை சங்கேந்தி ஏந்தி உடலெல்லாம்
திருநீறுபூசி
பித்தனாய் உனை மாற்றி உலகை வலக்கையிலே
தாங்கி நிற்கும் உலகநாதா…
பித்தனாய் உனை மாற்றி உலகை வலக்கையிலே
தாங்கி நிற்கும் உலகநாதா…
உயிர்கொண்ட நிலவாக
உம் மீது படர்ந்திருக்க
மார்போடு எனை அணைத்து .....
மார்போடு எனை அணைத்து .....
என்னுள்ளே குடிகொண்டு
எம் ஒருபாதி தனதாக்கி ....
வெண் பனி பூதூவ செந்தாமரையாய் முகம் மலர
நீயின்றி நானில்லை உமையவளே என்றெனை
தன்னுளே கொண்டவனே ....
கங்கையை சுமந்திருக்கும் கொற்றவனே
நர்த்தகியின் நடராஜனே ....
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
உனையன்றி வேறேதும் கதியில்லை எமக்கு…
காதலுடன் பூங்குழலி !!!!!