Friday, January 11, 2013

இசைத் தூண்கள்

தமிழன் சொந்தமாக சிந்திக்க இயலாதவன் தன் மண்ணிலே அடிமையக்கப்பட்டவன்
சொந்த நாட்டிலேயே வேற்று உலக வாசியாக சித்தரிக்க படுபவன் இவை தான் நமது அடையாளமாக சொல்லபடுவது .

உண்மையில் நம் பெருமையாய் நாமே
உணரவில்லை உலகிலேயே தலைசிறந்த கட்டட கலைநிபுணர்கள் தோன்றியது ,
தமிழ் மண்ணில்தான் மிகவும் வினோதமான முறையில் பின்பற்றபட்டது
உலக அதிசயப்பட்டியலில் இடம்பெறாத
அதிசயமான இசைத் தூண்கள்.
இந்த இசைத்தூண்களானது ஒரு நீளமான பாறையை வெட்டி எடுத்து, அதிலிருந்து ஏழு தனித்தனி சிறிய தூண்களாக வடித்துள்ளனர்,
இந்த ஒவ்வொரு சிறிய தூண்களை தட்டினால் சப்தஸ்வரங்கலான " ச,ரி,க,ம,ப,த,நி " என்ற தனித்தனி ராகங்களை அது இசைக்கின்றது ! .

சில பெரிய தூண்களை சுற்றி இடம் பெற்றுள்ள சிறிய தூண்களில் ஐம்பத்தி மூன்றுதனித்தனி ராகங்களை இசைக்கின்றது .

இதில் பெரிய தூணில் கர்நாடக சங்கீதமும்., அதை சுற்றியுள்ள சிறியதூண்களில்,
"மிருதங்கம்,கடம்,சலங்கை,வீணை,மணி " போன்ற இசைக்கருவிகளின், இசையை தருகின்றது .

அப்படி என்றால் ஒவ்வொரு கல்லையும் ஒவ்வொரு பதத்திற்கு இழைத்திருந்தால் தான் இப்படி இது வேறு வேறு ஒலிகளில் இசைக்கும்.

மற்றும் இந்த தூண்களுக்குள் காற்று உள்ளே நுழைந்து இசையை உருவாக்குவதற்கென ஒரு சிறு துவாரதைக்கூட உருவாக்கவில்லை .

இதை பற்றிய ஆராய்ச்சிக்கு " இசைத்தூண்கள் " ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் வெறும் ஆச்சர்யத்தை மட்டுமே பதிலாய் தந்து கொண்டிருக்கின்றது !!!!

இதுபோன்ற பல சிறப்புகளை நாம் முன்னோர்கள் நமக்காக வைத்து விட்டு சென்று இருக்கிறார்கள் அவர் வழிவந்த நம்மால் புதியதாக ஏதும் செய்ய இயலவில்லை என்றாலும் அவர்கள் தந்த மொழியையும், கலாச்சாரத்தையுமாவது
கட்டிக்காப்போம் !!!!!

நன்றியுடன் பூங்குழலி !!!

No comments:

Post a Comment