பனி மழை சிந்தும் மேகங்களின் யிடையே
மரகத பூஞ்சிட்டு மணிவாய் தனை
திறந்து மொழிகின்ற குரல் கேட்டு
எம் விழித்திரைக்குள்
மறைந்திருக்கும் சூரியனே
வெண்ணிலவின் முகம் காண வாராயோ !!!!!!
வெண்ணிலவின் முகம் காண வாராயோ !!!!!!
தென்றல் சிலிர்க்கின்ற சோலையிலே
குழலுக்கும் யாழுக்கும் தவழ்ந்திடும்
பூங்காற்றும் மலை
முகில் கூந்தலில் சிறைப்பட்டு விட்டதடா
முகில் கூந்தலில் சிறைப்பட்டு விட்டதடா
கோதையவள் கார்குழலில் சிக்குண்ட
காற்றும் காத்திருகிறது காண
வாராயோ!!!!
பொங்கி நிற்கும் பெரும் கடலும் தேங்கி விட்டது
உம்மவள் புன் சிரிப்புக்குள் சிக்கிவிடதால்
இதழ் திறக்க வேண்டுமெனில்
இளையவன் நீர் வரவேண்டும் வாராயோ !!!!
காதலுடன் பூங்குழலி !!!!
No comments:
Post a Comment