எமக்குள்ளே கனவுகளை விதைத்தவனே
நீ விதைத்தவை யெல்லாம் நிஜமாக்க எனக்குள்ளே
உமக்காக தோட்டம் ஒன்று வளர்க்கிறேன்
இத் தோட்டத்தில் மலர்ந்து யிருப்பது
உம் நிஜங்களும் நிழல்களும் மட்டுமே !!!
இங்கு நீராக எம் உதிரம் பாய்ச்ச படுகிறது
உரமாக எம் உயிர் தூவப்படுகிறது
மலராக எம் நேசம் மட்டுமே மலர்கிறது !!!!
நீ மட்டும் முழுமையாக மலர்ந்திருக்கும்
இங்கு யாருக்கும் அனுமதியில்லை
உனக்குள் நானும் எனக்குள் நீயும்
புதைந்து போனதின் நினைவாக
கல்லறையாகி போகட்டும் எமக்குள்ளே !!!!
காதலுடன் பூங்குழலி !!!
No comments:
Post a Comment