Tuesday, August 20, 2013

சுதந்திர தின வாழ்த்துக்கள்-2013


மின்னலை போலே
இன்னல் பல கண்டனர் 
இனி விடியலில்லை என்றபோதும் 
விடியலை நோக்கி சென்றனர் 
தடைகள் பல வந்தபோது
தயங்கவும் இல்லை தளரவும்யில்லை
நல்லோர் பலரை இழந்து
நள்ளிரவில்
கண்டனர்
விடியலை ...

தம் உதிரத்தில் திரியிட்டு
சுதந்திரம் எனும் அகல்விளக்கை
இளையோர் நம் கையில் கொடுத்துள்ளனர்
இவர்களின் தியாகத்தை உணர்ந்து
நமது தேசத்தின் ஒவ்வொரு
வளர்ச்சியும் தாழ்ச்சியும்
நம் அனைவரது வாழ்க்கையிலும்
பிரதிபலிக்கும் படி செய்வோம் .....


உலகில் உயர்ந்தது நம் நாடு 
நமை சுரண்டும் தீய சக்திகளை 
அடையாளம் கண்டு அகற்றுவோம்
தடைகளற்ற மேகத்தை வானில் கொண்டு 
நம் அடுத்த தலைமுறையினருக்கு
நல்லதோர் நாட்டை பரிசளிப்போம் 
இச்சுதந்திர காற்றை ஸ்வாசிக்க 
தந்தோருக்கு நன்றயுரைப்போம் .....!!!!

நண்பர்கள் அனைவர்க்கும் 
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் 

பூங்குழலி

No comments:

Post a Comment