Tuesday, August 20, 2013

கயற்கொடி கொண்ட கண்ணாளன்


கனிக்குள் சிறைகொண்ட விதையாய்
நின் மார்பில் மலர்ந்த
தாரகையின் தளிர்கரம் பற்றிட
நாளாகுமோ ?
சேற்றில் சிக்கிய களிறெனவே
பாலையிலே வெண்ணையாய்
உருகுகிறாள் பாவை

மழைகண்ட மயிலாய் தோகையாள்
நிலை கண்டு கல்லும்

கசிந்துருகி அலைபுரண்டு ஓடுதையா
முகில்கொண்டு நாணம் துடைக்கும்
நிலவழகி நிலைகண்டு
கடல்குளித்த முத்தும் வண்ணம் மாறியதோ ?
கெண்டையிடம் சிக்கிய துண்டில்
புழுவாய் இடை சிறுத்து
இமைமெலிந்து விட்டாள்

கடைவிழியோரம் காதலெல்லாம் 
சேர்த்து வைத்து காத்திருக்கும்
வஞ்சியின் வாடை தாங்கிய
மடல் கண்டதும்…


கயற்கொடி கொண்ட கண்ணாளன்
வருவனோ ? படைதிரட்டி

- காதலுடன் பூங்குழலி


No comments:

Post a Comment