Tuesday, August 20, 2013

குழந்தை இன்மை




இன்று குழந்தை இன்மை எனும் குறைபாடு பரவலாக காணப்படுகிறது .இந்த மலட்டுத்தன்மையால் ஆண்,பெண் இருபாலரும் பாதிக்க படுகின்றனர் எனினும் பெண்களை விட ஆண்கள் அதிகமாக பாதிக்கபடுவது கணக்கெடுக்கப்பட்டு உள்ளது ,இது ஒரு நோயல்ல குறைபாடே இதற்கு முக்கிய காரணம் அதிகமான மன அழுத்தம் ,புகை பிடித்தல் ,குடிபழக்கம் போன்றவையே இதற்கு கரணம் ,மாறிவரும் கலாச்சாரம் அறிவியல் வளர்ச்சி ,சுவாசிக்கும்காற்று,உண்ணும் உணவு . மற்றும் ஒரு மறுக்கமுடியாத உண்மை பரஸ்பரம் அன்பு ,விட்டு கொடுக்கும் மனநிலை இன்றைய நமது தலைமுறையினரிடம் அதிகம் காணப்படுகிறது .

அறிவியல் வளர்ச்சி , கல்வி அறிவு ,பொருளாதாரம் வளர்ச்சி இல்லாத முன்னோர்கள் காலத்தில்கூட மலட்டு தன்மை எனும் குறைபாடு இவ்வாளவு அதிகம் இல்லை.

எவ்வளவு செல்வம் இருந்தாலும் மழலை செல்வம் இல்லை என்றால் நம் வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடுகிறது .பணம் சம்பாதிப்பதில் இருக்கும் அக்கறையை தங்களது தலைமுறையை உருவாக்குவதில் ஏனோ காண்பிப்பது இல்லை.

இதனாலே பல இல்லங்களில் திருமண பந்தம் முறிவு ஏற்ப்பட்டுவிடுகிறது , விஞ்ஞான வளர்ச்சியில் விண்ணை தொடும் அளவிற்கு வளர்ந்துவிடோம் ஆனால் இன்றைய தலைமுறையினர் தனக்கு உள்ள குறைபாட்டை ஏற்று கொள்ள கூட முன்வருவது இல்லை,

சமுதாயத்தில் வெளிப்படையாக பாலியல் பற்றி பேசினாலே, பேசிய நபரை தவறாக மதிப்பிடும் போக்கு இருந்து வருகிறது. இதனாலேயே பொதுவான பாலியல் பிரச்சினைகளை, தங்களின் சொந்த பாலியல் குறைபாடுகளை கூட யாரும் வெளிப்படையாக பேசி, கேட்டு தெரிந்து கொண்டு தெளிவு பெரும் சூழல் இல்லாமல் இருக்கிறது. இன்று நாம் ஓரளவு பாலியல் விழிப்புணர்ச்சியின் ஆரம்பகட்டத்தில் இருக்கிறோம் என்றே கூறவேண்டும். வெளிப்படையாக பேச பாலியல்ரீதியான தெளிவு பெற மக்கள் முன்னேறி இருக்கிறார்கள்

மருந்துகளை உபயோகப்படுத்துவது ஒரு பக்கம் இருந்தாலும் காணும் இடமெல்லாம் கலப்படம் எனும் அரிதரம் பூசி நிற்கிறது அதிகமான விளைச்சளை பெற வேண்டி அளவிற்கு அதிகமாக பூச்சி கொல்லிமருந்துகளை உபயோக படுத்துவதால் சத்தாக வேண்டிய காய்கனிகள் நச்சாக மாறிவிட்டது ,உயிரை காக்கும் காற்றைக்கூட பிளாஸ்டிக் போன்ற பொருள்களை எரிப்பதால் விஷமாக மாற்றிவிட்டோம் ,இயற்கையாக சமைத்து சாப்பிட்ட காலம் மாறிப்போய் அவசரமான இயந்திர உலகத்தில் நுழைந்ததால் இன்று பாஸ்ட் புட்களில் வேஸ்ட் புட்களை சாப்பிடுகிறோம், பல செயற்கையான ரசாயனம் கலந்த உணவுகளை, அவசர கதியில் சாப்பிடுகின்றோம். நாம் சாப்பிடும் உணவு, இருக்கும் இடம், தண்ணீர் எல்லாமே மாசு படிந்து விட்டது. இத்தகைய சூழலும் இன்று பாலியல் குறைபாடு மக்களிடையே அதிகமாக முக்கிய காரணமாககிவிட்டது .

அறிவியல் முன்னேற முன்னேற நமது நடைமுறை வாழ்கையில் இருந்து உடலாலும் மனதாலும் நம் விலகிவருகிறோம் என்பது துல்லியமாக கணிக்கப்பட்டு உள்ளது ...........

பூங்குழலி .....

No comments:

Post a Comment