பிறைபோன்ற நெற்றியிலே
முழுமதி தாங்கி வந்தவளே
கயல் கூட்டம் விழியாக..
அன்னம் போன்ற நடையினிலே
அலையான சிற்றிடை
நளினமாய் நாட்டியம் ஆட
தாமரை வதனம் கண்டு
தரணியெல்லாம் திகைத்து நிற்க ..
சீர் கொண்டு காத்திருந்தோம்
சிங்காரி நின் வருகைக்காய்
தளுக்கி மினுக்கி தளிராக
தங்க சிலைபோலே ஆடியுடன்
ஆடிவந்த அன்னையே
நின் பாதம் தொட்ட இடமெல்லாம்
வண்ணம் மாறி மிளிருதம்மா...
அதை கண்டவுடன் சொற்பூக்கள்
என்னுள் மலர கவிதையாக
ஊற்றெடுதாய் தமிழன்னையோடு
கரம் கோர்த்து ..!!!
உன் மீது காதலுடன் பூங்குழலி
No comments:
Post a Comment