Tuesday, August 20, 2013

வானையும் தொட்டுவிடும் தைரியம் உண்டு ...


வெண்பஞ்சு கையிலே வில்லெதர்க்கு
கூரிய வில்லிரண்டு கயலிலெ
தந்தான் ஈசன் எமக்கு ....

முகிலென்று எண்ணி முன்னே வந்தால்
பிடிச்சம்பலை போவீர் மங்கையர் முன்னே
காதலாலே கோலம்போட்ட
கால் விரல் கொண்டு கயவனின்
குரல்வளை நெறிக்கவும்
தயங்கமாட்டாள் பெண்ணின்று ....

வானையும் தொட்டுவிடும்
தைரியம் உண்டு ...
பூமியையும் பிளந்துபார்க்கும்
வல்லமையுண்டு ....
சாகச பேச்சாலே மதிமயங்க
பெண் பாவையென்று எண்ணினாயோ ?

தென்றலாய் உலாவும்
பெண்ணை சீண்டினால் புயலுக்குள்
அகப்பட்டு புதையுண்டு போவீர்
உமை போன்ற திண்ணைவாழ்
வீணர் உரையால்
விளைவதென்ன?எமக்கு இங்கு...

பரணிலே போட்டுவைத்த கவிதைகள் அல்ல
நாங்கள் உதிரத்தில் செதுக்கிய சிற்பங்கள் .....

காதலுடன் பூங்குழலி .

No comments:

Post a Comment