வண்ணதுரிகையில்
வரைந்துவிட்ட வானவில்லாய் ...
வரைந்துவிட்ட வானவில்லாய் ...
துளித்துளியாய் தேன் சேர்க்கும்
மலர்போலே மெதுமெதுவாய்
சித்தத்தில் கலந்தெனை
பித்தாக அலையவிட்டாயே ...
மலர்போலே மெதுமெதுவாய்
சித்தத்தில் கலந்தெனை
பித்தாக அலையவிட்டாயே ...
நித்தம் ஒருநிலை தந்து -உன்
நினைவாலே புத்தம் புது
கவிபடைக்க எனை
மாற்றிவிட்ட வித்தகனே…
நினைவாலே புத்தம் புது
கவிபடைக்க எனை
மாற்றிவிட்ட வித்தகனே…
பார்காமலே பூத்த காதலை
விரல் பிடிக்கமாலே பிடித்து
நடந்த நொடிகளை எண்ணி
வாஞ்சையோடு வரையும்
வண்ண மடல் இது
காதலோடு வாசித்திடு
என் மாயவா ....
விரல் பிடிக்கமாலே பிடித்து
நடந்த நொடிகளை எண்ணி
வாஞ்சையோடு வரையும்
வண்ண மடல் இது
காதலோடு வாசித்திடு
என் மாயவா ....
காதலுடன்
பூங்குழலி
No comments:
Post a Comment