தான் பெற்றவன் உயர
உயிரை தந்த உறவு
உறவின்றி தெருவில்
ஒருவேளை உணவிற்கு
உழைக்கும் நிலையில்
பத்துமாதம் தான் சுமந்த
கன்றின் துணையின்றி
ஊன்றுகோலே உற்ற
துணையாக ஏங்கி கிடக்க
இங்கே மடிதந்தவள் மரணத்தை
எதிர்நோக்கி காத்திருக்கிறாள்
மடியிலே தவழ்ந்தவன்
எங்கோ மகிழ்ந்திருக்க
பூங்குழலி
No comments:
Post a Comment