Thursday, February 28, 2013

எனை ஏங்கவும் வைக்கிறாய்



காற்றில் அசைந்தாடும் கொடிமுல்லையாய்
சுருள் சுருளான கேசத்துக்குள்ளே
நின் விரல்கள் புகுந்தோடும் வேலையிலெல்லாம்
நித்திரை இழந்த நிலவாய் தேய்ந்து விடுகிறேன்

கயிறாக திரித்த கூந்தலிலே முடிச்சிட்டு
முத்தம் ஒன்று கொடுக்கையிலே
முழுதும் பற்றி எரியும் சூரியனாய் ஜொலிக்கிறேன் 

வெடித்து சிதறிய காதலுடன் மார்பில் சாய
தேற்ற முடியாமல் நீயும் எனைபோலே
கட்டி அணைத்து கதறி நிற்க 

சிறகு முளைத்த சடைகளுடன்
சிந்தை இழந்தவளாய்ஆயிரம் முறை
நினைத்து பார்த்துவிட்டேன் !!!!

எனை ஏங்கவும் வைக்கிறாய்
தேங்கவும் வைக்கிறாய்!!!!!

காதலுடன் பூங்குழலி !!! 

No comments:

Post a Comment