Tuesday, February 12, 2013

Feel My Love..




காற்றோடு கைக்கோர்த்துக்
சுழன்றடிக்கும் பெரும்மழையில்
முழுதும் நனைந்தபடி நானும் நியும்
நம்மிருவரையும் பார்த்தப்படி நிலவும் வானும் !!!!

நீர் சொட்டும் என் கேசம்தடவி
நிலம் நோக்கும் என் முகம் தூக்கி
நம் காதலின் பிரிவை கண்களில்
எழுதிய இனியவனே நீ மறந்தாய ? !!!

அன்று அடைமழையில் நனைந்தபடி
யாரும்மற்ற தெருவில் கரம்பிடித்தபடி
நானறியாத ஒருநொடியில்
என் உச்சியில் இதழ்ப்பதித்து
உயிராக இருப்பாயா நான் வாழும்
காலமெல்லாம் யென விழிநோக்க !!!

மலைநீரோடு என் கண்ணீரும்
உன் கைநனைக்க பதறியபடி
எனை அணைத்தாய் சற்றே
நாணத்தோடு மெல்ல விலகினேன் !!!!!!

இன்றும் கண்ணில் நீரோடு நிற்கிறேன்
ஏனோ அணைக்க மனமின்றி நீயும்
அணைக்க மாட்டாய யென நானும் !!!!!

காதலுடன் பூங்குழலி !!!

No comments:

Post a Comment