அதிகம் பேசாத உன்விழிகளில்
அடிக்கடி தேடிபார்த்திருக்கிறேன்
என் மீது நீ கொண்டது காதலா ?காமமா ?
தொடங்கும் முன்னே முடித்து விடுவாய்
உணரும் முன்னே உறங்கி விடுவாய்
உனை சுமக்கும் மற்றொறு கட்டிலாய்
விழித்து கொண்டிருக்கிறேன்
உன் பக்கத்தில்
உன் தேடலுக்கு நானா? இல்லை
நம் உணர்வுகளுக்கு நாமா
முண்டியடித்து வெளிவரும்
வார்த்தைகளை முடிக்கும் முன்னே
விசிறிவிட்டு போகும் போர்வையை போலே
உதறிவிட்டு போய் விடுகிறாய் என்னை
உணரும் முன்னே உறங்கி விடுவாய்
உனை சுமக்கும் மற்றொறு கட்டிலாய்
விழித்து கொண்டிருக்கிறேன்
உன் பக்கத்தில்
உன் தேடலுக்கு நானா? இல்லை
நம் உணர்வுகளுக்கு நாமா
முண்டியடித்து வெளிவரும்
வார்த்தைகளை முடிக்கும் முன்னே
விசிறிவிட்டு போகும் போர்வையை போலே
உதறிவிட்டு போய் விடுகிறாய் என்னை
உன் நெற்றியில் துளிர்த்த வியர்வை
துளிகளை கணகிட்டபடியே
மௌனமாகி ;போய்விடுகிறோம்
நானும் கட்டிலும்
எழுத்துகளில் ஒளிந்திருக்கும்
என் உதிரம் உருண்டோடுகிறது
விடியல் தேடியல்ல
விடை தேடி
காதலுடன் பூங்குழலி…
விடை தேடி உருண்டோடும் உதிரம்
ReplyDeleteவிரைவில் மொத்தமாய் காண்பாய் .. வாழ்த்துக்கள்
நன்றி
Deleteஉன் நெற்றியில் துளிர்த்த வியர்வை
ReplyDeleteதுளிகளை கணகிட்டபடியே
மௌனமாகி ;போய்விடுகிறோம்
நானும் கட்டிலும் (கட்டிலுக்கு
தன் உணர்வுகளை வெளிப் படுத்த தெரியாது
ஆனால் பூங்குழலியின் உணர்வுகளை
மதிக்க தெரியாதவனும் கட்டிலை போன்றவனே.....)