Sunday, June 23, 2013

இசையே...


காதோரம் வந்து செல்ல
கொஞ்சலாய் குலைந்து கோடி
மின்னலை கொட்டிவிடுகிறாய்

காற்றாய் கரையவைக்கிறாய்
ஊற்றாய் ஓட வைக்கிறாய்
நுரையை பூக்கவைக்கிறாய்
காயை கனியவைக்கிறாய்
வண்டுதுளையிட்ட புண்ணிலும்
பாமாலை வடிக்கிறாய் 

நாவிலே கரைகிறாய் அமிர்தமாய்
நாசியிலே சிக்குகிறாய் வாசமாய்
விழியிலே தெரிக்கிறாய் வானவில்லாய்

செவியிரண்டும் காத்திருக்க
உரோமம் யெல்லாம் புல்லரித்து எழுந்துநிற்க
இமைகள் தாழ்ந்து கம்பளம் விரிக்க
இதழ்யிரண்டும் இமைக்க மறக்க
வையத்தை ஆளுகிறாய் அழகாய்
நீயில்லை யெனில்
மீன்கலற்ற நதிபோலே
அலைகள் யில்லா கடல்போலே
மயானமாகிவிடுகிறது
மனிதன் வசிக்கும் புவி.
உனக்குத்தான் எத்தனை
ராஜமரியாதை இசையே 

இசையே உன் மயிற்ப்பீலி
விரல்கொண்டு என் மனதை தழுவு
மரணித்து விடுகிறேன் உன்மடியிலே

காதலுடன் பூங்குழலி

No comments:

Post a Comment