Sunday, June 23, 2013

எமை ஆளும் மீனாட்சி



பாலையில் படர்ந்த பசுந்தலையாய்
உம் மார்பினில் நான் படர
முகில் போலே நெளிந்தாடும் -
எம் கார்குழல் யெடுத்து
யாழ் மீட்டுவாயோ ...!!

இதழ் திறக்கா மலராய்
இமை திறவாமல் தவமிருப்பேன்
உம் பாதம் நான் காண ...!!
வானுக்குள்ளே சென்று
நீர் மறைந்தாலும் மின்னலேன்றே
எனை அழித்து உனை சேருவேன் ...!!

பதம் தூக்கி நடமாடும் சொக்கனாய்
நீர் மாரிபோனாலும்
உமை ஆளும் மீனாட்சியாய்
வடிவம் தாங்கியே நின் பதியாவேன்
என்னுள்ளே யாதுமானவனே ..!!

காதலுடன் பூங்குழலி !!!

No comments:

Post a Comment