Sunday, June 23, 2013

கவிதைக்காரி


கவிதைகளை கிறுக்குவதால்
நானொன்றும் கவிதைக்காரியில்லை
எனை நானே நேசிக்கிறேன் அதனாலே
என் வாழ்வின் எல்லா பக்கங்களையும்
சுவாசிக்கிறேன்

உணர்வுகளை ஊற்றி
சுவாசித்ததையும் நேசிதத்தையும்
கிறுக்குகிறேன் வெற்றுத்தாள்களில்

பூக்கும் சிந்தனை பூக்களை
மாலையாக கோர்க்கிறேன்
ஒரு பூக்காரியாய்

ஆனால் கவிதைகளை கிறுக்குவதால்
நானொன்றும் கவிதைக்காரியில்லை



காதலுடன் பூங்குழலி

No comments:

Post a Comment