Sunday, June 23, 2013

வாழ்கையின் பக்கங்கள்


உரியில் உப்பிருந்தும்
கறியில் உப்பிடவில்லை
உப்பிட்டு உண்டால் எங்களின்
உணர்வுகள் உயிர்ப் பெற்று
விடுமோ எனும் பயமில்லை ..!!

உணர்வுகள் மரத்து போயினும்
உரிமைகள் களவு போயினும்
எங்களது வாழ்கையின் ஒவ்வொரு
வரிகளிலும் நாங்கள் வாழ்கிறோம் .....!!

வாழ்கையின் பக்கங்களை
காசுகொடுத்து வாங்கியும்
வாழவழியின்றி தவிக்கும்
பணம் கொண்டோரே ...!!

எத்தனை காலம் போன பின்னும்
எங்கள் நிலைமாட்டும் மாறவில்லை
கிடைத்து எல்லாம் தனக்கென
நினைக்கும் மனிதன் ஒழியும் நாளே ....
எங்களின் ஏழ்மை நிறம் மறையும் நாள் ....!!!

காதலுடன் பூங்குழலி !!!

No comments:

Post a Comment