Sunday, June 23, 2013

மதியிலே ஒளியில்லாத குருடர்கள்


விழியிலே ஒளியில்லை கொடுக்க
தவறிய ஆண்டவனை
வெறுத்ததில்லை
மதி கொடுத்த ஒளியாலே
பயணிக்கிறோம் யாருக்கும் பாரமின்றி
எங்களது பாதையில்
வண்ணங்களை கண்டதில்லை
வாரி வாரி பூசியதில்லை ஆனால்
அதை நேசிக்கிறோம்
வானவில்லை பார்த்ததில்லை அதிலே
பயணிக்கின்றோம் வண்ணமயமாய்
மனிதர்களின் முகம் கண்டதில்லை
ஆனாலும் நேசிக்கிறோம்
பாவம் அவர்கள் மதியிலே
ஒளியில்லாத குருடர்கள்


காதலுடன் பூங்குழலி 

No comments:

Post a Comment