Sunday, June 23, 2013

உன்முத்தம் என்முத்தம் இது நம் முத்தம்


எண்ணத்தை எழுத்தாக பனியென கசிந்துருகி
பகிரங்கமாகப் பதித்து ஆண்கள்
பலர் மத்தியில் பேசப்படும்போது, ஏன் ?
பெண்களின் எண்ணங்களை மட்டும்
புழுதி அளவு கூடப் பேசப்படுவது இல்லை .

ஆண்களின் எழுத்தை கலையோடு மட்டுமே
இணைத்து நோக்கும் ஆணினம்
பெண் நுண்மையான காதலை கவிதையென
படைத்தால் அதை காமத்தின்
நுண்வடிவம் என்றே
ஏற்றுகொள்ள காரணம் என்ன ?
ஒருவேளை எங்களது எழுதும் எண்ணமும்
உங்களது அறிவிற்கு எட்டாமல் இருக்குமோ?

முத்ததில் உண்டோடி
உன்முத்தம் என்முத்தம்
இது நம் முத்தம் என்று
முழங்கும் ஆண் மனம்
வெற்றியில் உண்டோ
உன் வெற்றி என் வெற்றி
இது நம் இனத்தின் வெற்றியடி என்று
ஏன் ?ஏற்றுகொள்ள மறுக்கிறது

படைத்தவன் ஆண்டவனாகவே இருக்கட்டும்
ஆனால் பெண்ணில்லை யெனில் இவ்வையகத்தில
மனிதன் என்றொரு இனம் இருக்க வாய்ப்பில்லை
உன்னை சுமந்தவள் உனை விட உயர்ந்தவள்

எமக்கு எதிராக உம்மிடம் இருந்து வரும்
ஒவ்வொரு வார்த்தைகளும்
புழுக்களின் ரீங்காரமாகவே கேட்கிறது
அதனால் முடித்து கொள்ளுங்கள்
இன்றோடு உங்களது கூப்பாடை 

காதலுடன் பூங்குழலி

 

No comments:

Post a Comment