Tuesday, March 5, 2013

சங்கம் கொஞ்சும் செய்யுள் யாம்



ஓங்குமலை மீதினின்று பாய்ந்துவரும் அருவிபோலே
இமைக்க மறந்த
விழிகளுடன்
என்னவனையும்
உன்னை அணைக்க வேண்டி

மை தீற்றிய கண்களிலே மெய்க்காதல்
எழுதி வைத்து காத்திருக்கும் உன்னவளை
ஒரு கணம்மேனும் பார்வையால் தீண்டிசெல்லடா

அன்னமும் நாணும் நடைப்பையிலும் மாலையிலே
நங்கை
இவள் கொய்தது மலரை மட்டும்மல்ல
மாயவா உன் மனதையும் தான்

சங்கம் கொஞ்சும் செய்யுள் யாம்
உன்னுள்ளே சங்கமிக்கும் மங்கையும்
யாம் 
மைவிழி பூங்குழலி
கைவளை இசைப்பதும்,
தொள் தமிழ்
இறைப்பதும்,
நின்னடி சேரவே

உனையன்றி யாரெனக்கு..???
உயிர்தந்து
உறவாட..??

தென்றலோடு தென்றலாய்
தீண்டலோடு
கூடலாய்
உன்னோடு கலந்திடவே
காத்திருக்கேன் தனிசோலை இவள்

காதலுடன் பூங்குழலி !!!!

No comments:

Post a Comment