ஓங்குமலை மீதினின்று பாய்ந்துவரும் அருவிபோலே
இமைக்க மறந்த விழிகளுடன்
என்னவனையும் உன்னை அணைக்க வேண்டி
இமைக்க மறந்த விழிகளுடன்
என்னவனையும் உன்னை அணைக்க வேண்டி
மை தீற்றிய
கண்களிலே
மெய்க்காதல்
எழுதி வைத்து
காத்திருக்கும்
உன்னவளை
ஒரு கணம்மேனும்
பார்வையால்
தீண்டிசெல்லடா
அன்னமும் நாணும்
நடைப்பையிலும்
மாலையிலே
நங்கை இவள் கொய்தது மலரை மட்டும்மல்ல
மாயவா உன் மனதையும் தான்
நங்கை இவள் கொய்தது மலரை மட்டும்மல்ல
மாயவா உன் மனதையும் தான்
சங்கம் கொஞ்சும்
செய்யுள் யாம்
உன்னுள்ளே சங்கமிக்கும் மங்கையும் யாம்
மைவிழி பூங்குழலி
உன்னுள்ளே சங்கமிக்கும் மங்கையும் யாம்
மைவிழி பூங்குழலி
கைவளை இசைப்பதும்,
தொள் தமிழ் இறைப்பதும்,
தொள் தமிழ் இறைப்பதும்,
நின்னடி சேரவே
உனையன்றி யாரெனக்கு..???
உயிர்தந்து உறவாட..??
உயிர்தந்து உறவாட..??
தென்றலோடு தென்றலாய்
தீண்டலோடு கூடலாய்
உன்னோடு கலந்திடவே
காத்திருக்கேன் தனிசோலை
இவள்
காதலுடன் பூங்குழலி
!!!!
No comments:
Post a Comment