Wednesday, March 20, 2013

காதலுடன் பூங்குழலி



இல்லாத இடை கொண்டு
இலக்கியங்கள் நானெழுத
எம் இதயத்தை ஆட்கொண்டு
இப்பொழுதை உனதாக்கி
பசியாற காத்திருக்கும்
என் காதல்
பாவலனே

பாவையிவள் செங்கழுத்தில்
பொன் நாண்
பூட்டி
செவ்விதழில் செந்தமிழ்லேந்தி
கடைக்கண்ணில் காதல்
மின்ன
கருவிழியில் வாளேந்தி
கைகளிலே பனிப்பூவேந்தி
மேனியெல்லாம் மருதாணி நிறம் தாங்கி

உம் கவிதையிலே
கருத்தாகி
கனவினிலே சுந்தரியாய்
உம் காதலிலே காவியமாய்
மென்மையிலே தென்றலை போலே
எம் பெண்மை தாங்கி
மேகநிலவின் மோகம் தாங்கி
தவிக்கின்ற உம் நெஞ்சினிலே
யாம் தஞ்சம் கொள்ள வேண்டும்
நீர் வாளெடுத்து வெல்வீரோ
இல்லை எம் விழி வில்லில்
வீழ்வீரோ

காதலுடன் பூங்குழலி 

No comments:

Post a Comment