Thursday, March 21, 2013

இனி ஒரு விதி செய்வோம்


புத்தக சுமையை சுமந்து பல 
வித்தகங்கள் கற்றவர்கள் புரியாத
உலகத்தின் சூட்சமங்களை உணர்ந்து
பயணத்தை தொடங்கிவிட்டோம்

இருட்டில் கிடக்கும் எம் இனத்தை
அழகாக செதுக்கி ஜொலிக்கும்
முத்துக்களாக மாற்றும் வரை ஓயமாட்டோம்
சிறு தீப்பொறி என்று எண்ணிவிடவேண்டாம்
சிதறினால் நாங்கள் பட்ட

இடமெல்லாம் பற்றி எரியும்
உயிர் கொடுத்து இனம் காக்க
உறுதி பூண்டிருக்கும் மாணவ செல்வங்களின்
போராட்டம் வெற்றி பெறவேண்டும்

இவர்களுடன் சேர்ந்து போராடும்
வாய்ப்பு இல்லை எனினும் எனது முகபுத்தகம் வாயிலாக
சில கவிதைகள் எழுதியதே
எனக்கு பெருமையாக
உள்ளது

நன்றியுடன் பூங்குழலி


No comments:

Post a Comment