Monday, March 11, 2013

விண்மீன்கள் வானில் விளகேற்றும் நேரம்


இளங்காலை பொழுதினிலே
பொன்னி நதிக்கரையினிலே 
காத்திருக்கும் குழலியின்
இவள் விழியிரண்டை
பறித்து மறைந்த மாயவனே
எம் மனம் உமக்கொரு பிருந்தாவனமோ? !!!!

காற்றோடு குழல் கொள்ளும் காதலாய்
நின் மனதோடு எம் உயிர்சேர்த்து
இசைக்கும் பொழுது
கரைந்து மறைந்து விடுகிறேன் !!!!

விண்மீன்கள் வானில் விளகேற்றும் நேரம்
மாயவனின் மார்மீது விழிமூட வேண்டும்
சந்தனசிலையிடம் அந்தி கலைக்கு நீர்
விளக்கம் அளிக்க யாம் மயங்கி உருக !!!!!

வண்டாடும் வனம் எந்தன்
இதழ்லென்று நீர் வந்தாடும் நேரம்
எனை வென்று நயனமாடும்
ஒரு நவரச நாடகம் நளினமாக
இங்கு அரங்கேற வேண்டும் !!!

தணியாத தாகங்கள் யெனக்கு கொடுத்து
மறைந்த மாயவனே மழை கொண்ட
முகிலேனவே உம் வானில்
யான் பொழிய யுகமாக காத்திருக்கிறேன்
உடையென்று எம் இடைமீது நீர் பற்றி படர
எம் தவிப்பும் துடிப்பும் அடங்க எமை வந்து
ஆட்கொள்ளவேண்டும் எம் மாயவனே !!!!!

காதலுடன் பூங்குழலி !!!!

No comments:

Post a Comment