Sunday, March 3, 2013

மழைக்காற்றே மழைக்காற்றே



மழைக்காற்றே மழைக்காற்றே 
என் மன்னனனை காண்பாயோ
அவனின்றி இங்கே நான் படும்
வேதனை சொல்வாயோ

நிலவில்லா வானம் போல் நிதமும் 
தவிக்கின்றேன் தனிமையிலே
மணமில்லா மலரை போல்
மலர்கின்றேன் உன்னாலே

பாறைக்குள் வேர்விட்ட செடிப்போலே 
முளைத்து விட்டாய் என்னுள்ளே
உனை இழக்கும் வலுவின்றி 
உடைகின்றேன் தன்னாலே

பனியாக இருக்கும் என்னை 
அணைப்பாயோ என் சூரியனே 
நீ வருகின்ற தடம் பார்த்து 
காத்திருப்பேன் மாயவனே !!!!

காதலுடன் பூங்குழலி !!!

No comments:

Post a Comment