Wednesday, March 27, 2013

விழிமுடிய சிலையென்று




ஓலமிடும் கடற்க்கரை யோரம்
பசுமஞ்சள் தனை பூசி பொன்மேனி கொண்ட
தங்கசிலை கோதையொருத்தி.....
தணல்போன்ற மணல்மேலே தனைச் சாய்த்து
காத்திருந்தாள் உம் வருகைக்கு
வண்டுடைக்கா பூவென
காற்றணைக்கா தேனென
நிலம் தழுவா மழைத்துளி யென பூத்த
பூவையை உம் ஓரவிழி பார்வையாலே
உயிர்க்காடு பற்றியெரிய செய்துவிடுகிறாய்

விழிமுடிய சிலையென்று உம்
சில்லென்ற மார்பினிலே சிதற
என்னுள் வேர் விட்ட வேந்தே
நிலவு முகத்தரசிநெற்றியிலே
இதழ் பதிக்க இன்றேனும் நீர் வருவீரோ

காதலுடன் பூங்குழலி
 

No comments:

Post a Comment