சிந்திச்சிதறிய சிறு துளியெல்லாம்
சேர்த்து
மோகத்தோடு மேகத்தில் வைத்து தூதனுப்பினேன்
மோகத்தோடு மேகத்தில் வைத்து தூதனுப்பினேன்
ஆகாய தலைவனுக்கு
மோகத்தோடு வேகமாய்
மேகத்தை முத்தமிட்டு
பெரு மழை துளியாக சிதறவிட்டான்
காதலை எம்மேனியில்...
பெரு மழை துளியாக சிதறவிட்டான்
காதலை எம்மேனியில்...
மேனிநனைய நனைய
உம் உயிர்வாங்கி
பசுமையாக படர்ந்து நின்றேன்
பாரெல்லாம் செழித்து நின்றேன் வனமாக
பசுமையாக படர்ந்து நின்றேன்
பாரெல்லாம் செழித்து நின்றேன் வனமாக
கள்வனைபோலே மாசு
வந்து
கார்மேகத்தை கலைத்ததால்
தூதுவிட ஏதுமின்றி வெற்றுக்காகிதமாய்
பற்றிஎரிய தேகம் காய்ந்து விட்டது
கார்மேகத்தை கலைத்ததால்
தூதுவிட ஏதுமின்றி வெற்றுக்காகிதமாய்
பற்றிஎரிய தேகம் காய்ந்து விட்டது
மார்தந்து தாகத்தை
தீர்த்தவள்
வேதனையில் கொதிக்கின்றாள்
உயிர் தந்த உத்தமியை
ஊடுருவி சுரண்டுகிறோம்
என்பதை உணர்வாய மானிடா..??
வேதனையில் கொதிக்கின்றாள்
உயிர் தந்த உத்தமியை
ஊடுருவி சுரண்டுகிறோம்
என்பதை உணர்வாய மானிடா..??
போர் கால சூழல் போல
ஓடிக்கொண்டே இருக்கிறாய்
உன் போலியான தேவைநோக்கி
நீ வாழ எனைத்தந்தேன் நீயோ சுயநலமாய்
எனை அழிக்க தயரகிவிட்டாய்…
ஓலமிட்டு கதறுகிறேன் அலட்சியம் செய்யாதே..!!
இயற்கையெனும் அன்னை நானில்லை யென்றால்
“உலகில்
நீ
வாழும் நாட்கள் கூட குறைந்துவிடும்”
காதலுடன் பூங்குழலி
No comments:
Post a Comment