பாழிருள் நீக்கும் பகலலை போலே
எம் வாழ்விருள் நீக்க வந்த காவலனே…
கண்வழி புகுந்து
கனவென மலர்ந்த
காற்றெனும் கயவனே
விம்தித் தாழ்ந்த வெண்மார்பில்
விலங்கிட்டு உமை பூட்ட
கண்ட மலைவீழ் அருவியும் மாமுகில் போர்த்தக் சுனைநீர் கயலும்
தம் விழியிரண்டை மூட
உம் வீரம் கண்ட மேனி நிறம் மாற
வாலைபூவென நாணிநிற்கும் ஏந்திழையாழை
கண்டு நகைக்கும் ஏந்தலே
மங்கைநல்லாள் நிலமாக மீண்டும்
நீர் மழையாய்வருவீரோ
காதலுடன் பூங்குழலி
No comments:
Post a Comment