Tuesday, April 16, 2013

உளறலாய் ஆயிரம் கவிதைகள்




உயிர் நீயென்று ஆனப்பின்னே 
உனை மறக்கும் துணிவு எனக்கில்லை....
 
உன் நினைவு 
உதிரத்தோடு கலந்து விட்டது 
என்னுயிரை உதறும் வரை 
பயணிக்கும் உணர்ந்துகொள்....

உளறலாய் ஆயிரம் கவிதைகளை கொட்டிதிர்க்கிறேன்
நீ உணர்ந்தயா ..??

உனை கண்ட விழியிரண்டும் எனைக்கூட
காணமல் மருகுகிறது..!!

வருங்காலம் எப்படி விடியுமென்று..? 
இமை திறக்கமால் இருளுக்குப் பழக்கப்பட முயன்றால்
விசமம் செய்கின்றனவிழிகள்

இமையோரம் எட்டிப் பார்க்கும்
விழிநீரும்... ஏக்கமாய் பார்கிறது
உனை சுமக்கும் 
என் காதலை...

காதலுடன் பூங்குழலி ...

No comments:

Post a Comment