Saturday, April 13, 2013

பெண்மை..



மலராத வயிரென்று..! நான் பெற்ற பெயர் நீங்க,
தாமரையே .. என்னுள்ளே சூல் கொண்ட  நிலவாக
தங்கமே நீ வாராயோ …!!

வெள்ளிக்கொலுசு ஒலிக்க
வெல்லக்கட்டி நீ வருவாயோ ..

பாலும் சோறும் நானூட்ட
மல்லிகையே நீ வரையோ..

முல்லை அரும்பே நின் செவ்விதழ்
விரித்திட்டால் வீசும் மணத்திற்கு ஈடேது

செவ்வாய் திறந்து உதிர்க்க போகும்
அம்மா எனும் வார்த்தையெனக்கு வேதமடி

பால் மணம் மாற கண்மணியே வரபோகும்
நாளுக்காய் காத்திருக்கிறேன்

அன்னை வைத்த பெயர் மறந்து விட்டதடி
மலடி யெனும் பெயர் எனதாகி போனதடி
மொட்டு பூக்கும் முன்னாலே முடிந்து வைத்த
ஆசையெல்லாம் கவிதையென

தீட்டி இருக்கிறேனடி என்தங்கமே நீ வந்தால்
ஓவியமாகும் இல்லையேல் வெற்றுக்காகிதமாகும்

காதலுடன் பூங்குழலி !!!

No comments:

Post a Comment