நீலவண்ண வானில் மின்னும் நட்சத்திரங்களின் ஊடே
மேகத்தில் புதைந்திருக்கும் வட்ட முக
"வெண்ணிலவு பெண்ணே"
உனை பாடாத கவிஞன்யில்லை
காணாத கண்களும் இல்லை
உனை தேடாத மனமும்யில்லை
என் கவிதை கேட்பாயா நீ?
என்னவனை காணநேர்ந்தால் இதை
சேர்ப்பாயோ நீ ?
இங்கு வானும் இல்லை வட்டமுகமும்
யில்லை
வெகுதுரத்தில் இருந்தாலும் என்னவனின்
நினைவு மேகத்தில்
எனை புதைதிருக்கிறேன் கவிதைகள் ஏதும் பாடவில்லை
பகலிரவாய்
தேடுகிறேன் பார்ப்பேனோ அவனை பாராமலே போவேனோ
மரம் விட்ட இலையாய் மண்ணில்
வீழ்ந்தாலும்
அவன் திசைநோக்கியே பறக்கிறேன்
சேரும்முன்னே சருகாவேனோ..?
காதலுடன் நந்தினி தேவி
No comments:
Post a Comment