Sunday, May 26, 2013

அக்கா


வீட்டிலே அவளிடத்தை பிடித்து
கொண்டதற்கு கொள்ளை கோவம் கொண்டிருந்தாலும்
அதை என்னிடம் காட்டியதில்லை
உறங்கும் போது பக்கம் அமர்ந்து
முகம் நோக்குவாள்
விழித்ததும் கிள்ளிவிட்டு ஓரம் நின்று
கவனிப்பாள் ஆனால் ஒருபோதும் என்
அழுகையை விரும்பியது இல்லை

எனை வயிற்றில் சுமக்கவில்லை
மடியில் சுமந்திருகிறாள் 
அன்னையை போலே மார்பில் பாலுட்டவில்லை
அன்னையாய் மாறி அணைத்திருக்கிறாள் 

என்னை நிழல் போலே தொடரும்
கண்காணிப்பாளர் அவள்
அக்கா என்றதும் ஓடிவந்து கட்டிகொள்வாள்
சிறிதும் தயக்கம் இன்றி சொல்கிறேன்
நீ என் மழலை அன்னையடி


காதலுடன் பூங்குழலி

No comments:

Post a Comment