Sunday, May 26, 2013

அணைக்க அன்னையின்றி



வெள்ளை சிரிப்பினிலே எனை
கொள்ளைகொண்ட கொள்ளைகாரனே
பட்டு பாதமதில் ஆயிரம்முறை
எட்டி உதைத்தாலும் மறுபடியும்
பாதம் பட காத்திருக்கிறதடா என் கன்னம்
எச்சில் நீரொழுகும் ஈரா இதழாலே
நெற்றியெல்லாம் கோலமிட்ட
என் அழகு கண்ணனே

உனை கருவறையில் நான் தாங்க
என்னதவம் செய்தேனோ ..!!
என்று கட்டி அணைக்க அன்னையின்றி
நித்திரையிலேயே (கனவிலே )
நிதமும் நான் வளர
என்ன பாவம் செய்தேனோ

காதலுடன் பூங்குழலி

No comments:

Post a Comment