Sunday, May 26, 2013

உன் நினைவு அலைகள்


வானம் வரைந்து வைத்த துரிகை போலே
வண்ணமயமாய் உன் நினைவுகள்

வெளிச்சங்களை தின்றுவிட்டு
கருமையை பூசி காத்திருக்கும்
மழை மேகம் போலே
எப்பொழுதும் பொழியத் தயராய்
என்னுளே உன் எண்ண மழைகள்
தொடுவதும் விடுவதுமாய்
என் மனதின் கரைகளை அரித்து செல்லும்
உன் நினைவு அலைகள்
கண்ணில் படாமல் சுவாசம் தரும்
காற்றைப்போல்
எப்பொழுதும்
என்னக்குள் அணைதிருக்கும் உன் வாசம்

இப்படி முழுமை பெறாத பல இரவுகளை
கடந்த பின்னும் காத்திருக்கிறேன்
உன் விரல் தீண்டலுக்கு

காதலுடன் பூங்குழலி
….

No comments:

Post a Comment